2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பெண்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல்கள் அதிகரிப்பு!

உள்ளூர்May 7, 2026 · 3 months முன்1
பெண்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல்கள் அதிகரிப்பு!

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற இந்த முறைப்பாடுகளில் சுமார் 2,300 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்ட தரவுகளின்படி: பெண்களுக்கு எதிராக 4,103 சைபர் குற்றப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 753 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 3,348 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெற்ற 3,159 முறைப்பாடுகளில் 982 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஏனைய 2,177 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து 4,742 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றில் 572 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், மேலும் 4,170 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.