2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

செம்மணி புதைகுழி அகழ்வில் என்புக் கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

உள்ளூர்April 29, 2026 · 4 months முன்2
செம்மணி புதைகுழி அகழ்வில் என்புக் கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் , அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி ஞா. ரனீத்தா தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் நாள் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

இன்றைய அகழ்வு பணிகளின் போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட இரு என்பு கூட்டு தொகுதிகளின் பகுதியளவான என்பு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை அகழ்வு பணிகளின் போது சில என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவற்றை சுத்தம் செய்த பின்னரே எத்தனை என்பு கூடு என்பதனை உறுதியாக கூற முடியும். அகழ்வு பணிகள் 1.5 அடி தொடக்கம் 2 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த ஆழத்தில் அகழ்வு பணிகள் மேற்கொண்ட என்பு கூடுகள் மீட்கப்பட்டன. 

இன்றைய அகழ்வு பணிகளின் போது ஓர் இடத்தில் சந்தேகத்திற்கு உரிய முறையில் கரியநிற மண் காணப்பட்டது. அதனால் , அதனை அரித்தட்டு மூலம் அரித்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறிய வலை போன்ற பொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.