2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனத்திற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம்!

உள்ளூர்April 28, 2026 · 4 months முன்2
தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனத்திற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம்!

அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் நீண்டகாலமாக நிரந்தர நியமனங்கள் இன்றி பணியாற்றி வந்த சுமார் 9,800 ஊழியர்களுக்கு இந்தத் தீர்மானத்தின் ஊடாக நிவாரணம் கிடைக்கவுள்ளது.

இதுவரை காலமும் தினக்கூலி அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றியவர்கள் இந்த புதிய நடைமுறையின் கீழ் நிரந்தர சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர்.

இந்த ஊழியர்களை நிரந்தரமாக்கும் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக, உரிய அரச நிருவாக சுற்றுநிருபத்தை உடனடியாக வெளியிடுவதற்கு அமைச்சரவை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.