2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

வெள்ளை மாளிகையில் திடீரென ஏற்பட்ட பெரும் பரபரப்பு!

உலகம்April 26, 2026 · 4 months முன்3
வெள்ளை மாளிகையில்  திடீரென ஏற்பட்ட பெரும் பரபரப்பு!

வோஷிங்டன் ஹில்டன் விருந்தகத்தில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, அங்கிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் பாதுகாப்புப் படையினரால் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

பின்னர் அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிடிபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் ஹில்டன் விருந்தகத்தின் பிரதான மண்டபத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.