துசித ஹல்லொலுவின் மனு நிராகரிகரப்பு

கொழும்பு நீதவான் நீதிமன்றம் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை நிராகரிகரித்து இன்று உத்தரவிட்டது.
கொழும்பு மேலதிக நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பயணித்த வாகனத்தின் மீது அண்மையில் நாரஹேன்பிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




