2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய நிதி மோசடி : பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

உள்ளூர்April 24, 2026 · 4 months முன்2
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய நிதி மோசடி : பொதுமக்களுக்கு  அவசர அறிவிப்பு!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பல் குறித்து அந்தத் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகத் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர அழைப்பு இலக்கத்தை ஒத்த எண்களைப் பயன்படுத்தி இம்மோசடி அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக +94115226126, +0115226126 , 0771167739, 0742756098 ஆகிய இலக்கங்கள் குறித்து பொதுமக்கள் அதீத அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.