குவைத் விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு!

குவைத் வானூர்தி சேவைகள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு இணங்க, குவைத்தின் தேசிய வானூர்தி சேவையான குவைத் ஏர்வேஸ் மற்றும் தனியார் வானூர்தி சேவையான ஜசீரா ஏர்வேஸ் ஆகியன தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவுள்ளன.
பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுக்கான வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் தொடர்பு மையம் சமூக வலைதளங்கள் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத் சர்வதேச வானூர்தி நிலையம், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.




