2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

ஈரானுடனான உடன்பாடு எட்டப்படும் வரை துறைமுக முற்றுகை நீக்கப்படாது

உலகம்April 21, 2026 · 4 months முன்1
ஈரானுடனான உடன்பாடு எட்டப்படும் வரை துறைமுக முற்றுகை நீக்கப்படாது


டெஹ்ரானுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரும் வரை ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முற்றுகைகள் நீக்கப்படமாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா? என்பது குறித்த நிச்சயமற்ற நிலை நிலவி வரும் சூழலில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த வாரம் ஆரம்பமான இந்தத் துறைமுக முற்றுகையினால் ஈரான் முற்றிலும் அழிந்து வருவதாக ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

அத்துடன், இந்த மோதலில் தனது நாடு முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் வரும் புதன்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் பாகிஸ்தானில் நடைபெறுமா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 

இந்தச் சந்திப்பை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்கத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கவுள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதி J.D. Vance இதுவரை வொஷிங்டனில் இருந்து புறப்படவில்லை என்பதுடன், இந்தப் பேச்சுவார்த்தையில் தாம் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.