2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நுவரெலியாவுக்கு இந்திய துணைத் தலைவர் விஜயம்

உள்ளூர்April 20, 2026 · 4 months முன்2
நுவரெலியாவுக்கு இந்திய துணைத் தலைவர் விஜயம்

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று (20) காலை நுவரெலியா பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டார்.

இதன்போது, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் மலையக சமூகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், நுவரெலியா சீதா அம்மன் கோவிலில் இன்று (20) நடைபெறவுள்ள மத வழிபாடுகளிலும் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று (19) இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்தடைந்துள்ள அவர், நேற்று (19) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.