2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பிள்ளைகளைக் காப்பாற்றச் சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்

உள்ளூர்April 18, 2026 · 4 months முன்0
பிள்ளைகளைக் காப்பாற்றச் சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்

மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒருவர், நீரில் மூழ்கி நேற்று (17) மதியம் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மருதன்குளம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் தனது நண்பர் ஒருவருடன் குளத்திற்குச் சென்றிருந்த போது, அங்கு நீராடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மற்றொரு சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டுள்ளார்.  

அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் குளத்தில் குதித்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இருப்பினும், 11 மற்றும் 12 வயதுடைய அந்த இரு சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.

 சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்