2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொல்கத்தா அணி தலைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

விளையாட்டுApril 15, 2026 · 4 months முன்2
கொல்கத்தா அணி தலைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

2026 ஐபிஎல் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களை பெற்றது.

193 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இந்தநிலையில் மெதுவாக பந்து வீசியதற்காக கொல்கத்தா அணி தலைவர் ரகானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். நடத்தை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட இந்த அபராதமானது, இந்த தொடரில் கொல்கத்தா அணியின் முதல் விதிமீறலாக அமைந்ததால், இந்த அபராதமானது தலைவருக்கு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.