2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

“உலக அமைதிக்கான மகத்தான தருணம் இது” டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

உலகம்April 8, 2026 · 4 months முன்2
“உலக அமைதிக்கான மகத்தான தருணம் இது”  டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

மத்திய கிழக்கில் புதிய பொற்காலம் மலரவுள்ளதாகவும், உலக அமைதிக்கான ஒரு மகத்தான தருணம் இதுவென்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தற்போதைய பதற்றமான சூழலில் இருந்து விடுபட விரும்புவதாகவும், உலக நாடுகள் அனைத்தும் அமைதியையே எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைப்பதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் பாரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ள அவர், ஈரான் தனது நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

சகல விதமான விநியோகப் பொருட்களுடன் அமெரிக்கா அங்கு நிலைபெற்றிருக்கும் எனவும், தற்போது அமெரிக்கா அனுபவித்து வரும் பொருளாதார செழிப்பைப் போன்றதொரு “பொற்காலம்” மத்திய கிழக்கிற்கும் உருவாகும் என தான் நம்புவதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.