2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மீண்டும் அதிகரிக்கிறது மசகு எண்ணெய் விலை!

உலகம்April 6, 2026 · 4 months முன்1
மீண்டும் அதிகரிக்கிறது மசகு எண்ணெய் விலை!

மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையை மீண்டும் ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

இன்று வர்த்தகம் ஆரம்பமான போது, சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் (Brent Crude) ஒரு பீப்பாயின் விலை 2.2 சதவீதத்தால் அதிகரித்து, 111.43 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், WTI ரக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயின் விலை 2.7 சதவீதத்தால் உயர்ந்து, 114.57 டொலராகப் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியான போர் காரணமாக விநியோகக் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பானது எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.