2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பதற்ற சூழலிலும் ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ் கப்பல்

உலகம்April 4, 2026 · 4 months முன்1
பதற்ற சூழலிலும் ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ் கப்பல்

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடிய பிறகு, முதன்முறையாக பிரான்ஸ் நாட்டு சரக்குக் கப்பல் ஒன்று அதன் வழியாகப் பயணித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடான பிரான்ஸை, ஈரான் ஒரு எதிரி நாடாகக் கருதவில்லை என்பதையே இது காட்டுகிறது என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தமது கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்க அனுமதி கிடைக்கும் என பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாகவும் நம்பிக்கையுடனும் அமைந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரசா லாசரோ குறிப்பிட்டார்.

இதன் மூலம் பிலிப்பைன்ஸ் கொடியுடன் கூடிய கப்பல்கள், எரிசக்தி வளங்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் மாலுமிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை வழங்க ஈரான் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.