பாராளுமன்றத்தில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிப்பு!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அமைச்சர் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று, பதாகைகளுடன் எதிர்ப்புத் தெரிவித்தனர்.



