2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

யாழ்தேவி மீண்டும் பயணத்தில்! கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

உள்ளூர்May 11, 2026 · 3 months முன்2
யாழ்தேவி மீண்டும் பயணத்தில்! கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பிரபல யாழ்தேவி தொடருந்து சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய அட்டவணையின்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ்தேவி தொடருந்து இயக்கப்படும்.

அதேபோல், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு தினங்களில் சேவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யாழ்தேவி தொடருந்தில், பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட நான்கு முதல் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், பயணிகள் முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதியை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை, வடக்கு மக்களுக்கும் தலைநகருக்கும் இடையிலான பயணத்தை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.