2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

விமலின் சத்தியாக்கிரகப் போராட்டம் – நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளூர்January 12, 2026 · 7 months முன்1

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை தொடங்கிய தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பாக கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டம், புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த நீதிமன்ற உத்தரவில் உயர்தரப் பரீட்சைகள் தற்போது அந்தப் பகுதியில் நடைபெற்று வருவதால், போராட்டக்காரர்கள் சாலையைத் தடுக்கக் கூடாது என்றும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.