2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்து

உள்ளூர்February 16, 2026 · 6 months முன்2
இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்து

40 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை மற்றும் நீண்டகால விசா வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 1983 முதல் இலங்கையில் ஏற்ப்பட்ட இன மோதல்களால் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான வசதிகளை வழங்கியது.

இவ்வாறு 89000 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் பலர் 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் உள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இலங்கை தமிழர்களின் குறித்தான முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கியதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.