2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாதாள உலகக் குழு : 15 பேர் கைது

உள்ளூர்March 21, 2026 · 5 months முன்0
பாதாள உலகக் குழு : 15 பேர் கைது

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 15 சந்தேகநபர்கள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் மற்றும் சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தால் இன்று காலை ரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள வீடமைப்புத் தொகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களுள் பெண் ஒருவரும் உள்ளடங்குவதோடு, அவர்கள் அனைவரும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.