பாடசாலை வேன் கோர விபத்து – மாணவர்கள் பலி.

குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று காலை (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த மேலும் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





