2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம் !

உள்ளூர்August 13, 2025 · 1 year முன்0
நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம் !

இலங்கையின் மூத்த துணைப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை புதிய பொலிஸ் மா அதிபராக (IGP) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நியமித்துள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவினால் பிரியந்த வீரசூரியவிடம் இன்று புதன்கிழமை (13) பிற்பகல் வழங்கப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61 E (b) பிரிவின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 37வது பொலிஸ் மா அதிபராக வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.