நாமல் நீதிமன்றத்திற்கு வருகை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரிக்கப்படும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு பாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வருகை தந்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச,
அரசாங்கம் தொடர்ந்து ராஜபக்சக்களைப் பழிவாங்கி வருவதாகவும், இப்போது ரணில் மீது பழிவாங்குவது ஒரு புதிய சூழ்நிலையாக மாறியுள்ளது என்றும் கூறினார். அரசாங்கத்தின் பழிவாங்கும் கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.