நாட்டில் இன்று கடும் மழை.

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மேலும், வடமேல் மாகாணத்தில் இலேசான மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.




