பொலிஸாரால் – துப்பாக்கிதாரர் சுட்டுப் படுகொலை.

சூரியவெவ பகுதியில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் துப்பாக்கிதாரர் ஒருவர் பலியானார்.
நபர் ஒருவரைக் கைது செய்ய முயன்றபோது, அந்த நபர், படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




