சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று மாலை ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கொழும்பு தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட பல தீயணைப்பு வாகனங்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பழைய எரிபொருள் கொள்கலனில் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




