கிளிநொச்சியில் கோர விபத்து.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




