2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மாணவர்களை கௌரவிக்கும் – ACMC

உள்ளூர்October 10, 2025 · 10 months முன்2
மாணவர்களை கௌரவிக்கும் – ACMC

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) கல்விப் பிரிவு தேசிய அளவில் சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று முதல் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் உயர் தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இந்த தேசிய அளவிலான கௌரவிப்பு நிகழ்வுகளுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களை கெளரவிக்கவுள்ளார்.

கல்வித் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் எதிர்கால கல்விப் பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாக கட்சியின் கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வகையில்,

இன்று (10) வெளிக்கிழமை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பொது மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன்,

சனிக்கிழமை (11) மாலை 4 மணிக்கு கல்முனை வலயத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது வெலிவோரியன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை புத்தளம் மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 17 ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், மாலை 4 மணிக்கு வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 9 மணிக்கு குருணாகல் மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகளுக்கு, கட்சியின் அரசியல் அதிகார பீட உறுப்பினர்கள், உயர்பீட உஉப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.