2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

உள்ளூர்September 14, 2025 · 11 months முன்0
மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி 21 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள் வெளியேறும் பகுதியில், குறித்த நபர் அவருடைய காலுறையில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருக்கும் போதே கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.