2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

உள்ளூர்November 27, 2025 · 9 months முன்2
சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை (28) சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன பணிப்பாளர் ஜெனரல் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 65,000 கன அடி வெளியேற்றப்படுகிறது. இது ஆற்றின் கொள்ளளவை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகம்.

அதன்படி, ஆற்றின் இரு கரைகளும் முழுமையாக நீரில் மூழ்கும். தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று மாலை அல்லது நாளைக்குள் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. மருத்துவமனை, குறிப்பாக குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.