2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

X-Press Pearl நிறுவனம் இழப்பீட்டை வழங்க மறுப்பு !

உள்ளூர்September 23, 2025 · 11 months முன்2
X-Press Pearl நிறுவனம் இழப்பீட்டை வழங்க மறுப்பு !

இலங்கை கடற்பரப்பில் 2021ஆம் ஆண்டு தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்துக்கான $1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டை வழங்க, அந்த கப்பலின் உரிமையாளர் நிறுவனம் X-Press Feeders மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2021 மே மாதம், சிங்கப்பூரைச் சேர்ந்த MV X-Press Pearl கப்பல், இலங்கை கடற்பரப்பில் பயணிக்கும்போது தீப்பற்றியது. இதனால் பெரும் அளவிலான பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் விஷமயமான கழிவுகள் கடலில் கரைந்து, கடல் வாழ் உயிரினங்கள் இறந்து, கரை ஒதுங்கியன.

இந்த சம்பவத்தால் இலங்கையின் கடல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டது என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.