வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிப்பு உரிமை.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இவ் குழுவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துவது அல்லது புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்வதற்கான பொறுப்பு வழங்கப்படவுள்ளது.