தொடரும் சீரற்ற வானிலை.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் சில நாட்களுக்குத் தொடரும் எனவும்,நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை சில நாட்களுக்கு பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.




