அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு.

பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தின இன்றைய சபை அமர்வில்,
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானம் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றும் தற்போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை பொருந்தாததால் மற்றும் அது உரிய முறையில் இல்லாதததாலும் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.




