பிரதமர் நாளை இந்தியா விஜயம்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாளை அக்டாபர் 16 முதல் அக்டாபர் 18 வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் மட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் முக்கியக் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டாபர் 17ஆம் தேதி, NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில்,”நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




