நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலை.

நாட்டில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்றைய நாளில் 3,80,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்த 24 கரட் பவுண் தங்கத்தின் விலை 3,90,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நேற்றைய நாளில் 3,51,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்த 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 3,60,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




