நாடளாவிய ரீதியில் 4,476 பேர் கைது.

நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை (06) பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 4,476 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 672 பேரும், சந்தேகத்தின் பேரில் 16 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 171 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 131 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 38 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 09 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3439 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




