சம்பத் மனம்பேரியின் விளக்கமறியல் நீடிப்பு.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை எதிர்வரும் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மித்தெனிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பத் மனம்பேரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




