2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நிமல் லான்சாவுக்கு பிணையில் செல்ல அனுமதி

உள்ளூர்September 8, 2025 · 11 months முன்2
நிமல் லான்சாவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணையில் செல்ல நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிமல் லான்சா அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நிமல் லான்சாவை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.