நாடுமுழுவதும் GovPay டிசம்பரில்.

நாட்டில் வாகனங்களுக்காக GovPay வாயிலாக அபராதம் செலுத்தும் முறைமையை நாடு முழுவதும் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.




