நாகை – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்.

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் டிசம்பர் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அக் கடல் பகுதிகளில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு இந்த பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




