#News Alert கல்கிஸ்ஸை சம்பவம் – பொலிஸ் அதிகாரிக்கு பிணை.

கல்கிஸ்ஸை நீதிமன்றின் வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை தலா 100,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.




