கெஹெலிய மற்றும் குடும்பத்தினர் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று (10) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளனர்.
பணமோசடி சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




