2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் விலக தீர்மானம்

விளையாட்டுNovember 4, 2025 · 10 months முன்1
ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் விலக தீர்மானம்

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜோனதன் ட்ரோட் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு 20 தொடருடன் அந்த பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இதனை உறுதிப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய கிரிக்கெட்டில் பயிற்சி மாற்றங்கள் இயல்பானதாகும் என்பதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்கிறது. அணிகள் உருவாகுவது போலவே, அவர்களின் தலைமை மற்றும் மூலோபாயத் தேவைகளும் உருவாகின்றன.

எந்தவொரு சர்வதேச அணியும் எப்போதும் ஒரே பயிற்சியாளரின் கீழ் இருக்காது, மேலும் நீண்டகால இலக்கை நோக்கி கட்டமைக்கப்படுவதால் இந்த மாற்றம் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் ஏற்படுத்துவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

18 மாத காலப்பகுதிக்கு அவரது பதவி காலம் வழங்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அது நீடிக்கப்பட்டிருந்தது.

ட்ரோட்டின் பதவிகாலத்தில் 43 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 20 போட்டிகளிலும் 61 சர்வதேச டி-20 போட்டிகளில் 29 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.