ஜீப் கடத்தல் வழக்கு – அரசியல்வாதி, வர்த்தகர் கைது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன், வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவரும் அவரது நெருங்கிய கூட்டாளியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவீந்திர குமார என்ற 58 வயதான நகரசபை முன்னாள் தலைவரும் லக்ஷித மனோஜ் என்ற 38 வயதான வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




