ஜனாதிபதிக்கு சிறை தண்டனை வாய்ப்பு ? கம்மன்பில குற்றச்சாட்டு.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சில அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறை செல்லக்கூடும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விவரங்களை மறைத்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் மற்றும் சலுகைகள் விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இது குற்றமாகும் என்றும், ஆட்சியில் முன்னேற்றம் இல்லாமல் அரசியல் பழிவாங்கலே நடைபெற்று வருவதாகவும் விமர்சித்தார்.




