தங்கம் விலையில் அதிகரிப்பு

இன்று கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தங்கம் பவுண் ஒன்றிற்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை 289,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்று 293,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதென கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (08) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 293,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.




