இலங்கை மின்சார சபை – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக பொறியியல் பிரிவு தொழிலாளர்கள் சங்கம் இலங்கை மின்சார சபை 4 பிரிவுகளாக உடைத்து தனியார் கம்பெனிகளுக்கு வழங்குவதை எதிர்த்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று (17) முன்னெடுத்திருந்தனர்.
மின்சார சபை தனியார்மயப்படுத்தப்படுவதினால் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டகாரரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இரண்டு வருடத்திற்கு பிறகு பல துண்டுகளாக சபையை பிறித்து தனியார் கம்பெனி மயமாக்கல் அரசினால் நடைபெறுவதாக ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.




