யாழில் 3 இளைஞர்கள் கைது – 180 போதை மாத்திரைகள் பறிமுதல் !

யாழ்ப்பாணம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை பகுதியில் பொலீஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை மாத்திரைகளை நீண்ட நாட்களாக வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் இன்று (20) யாழ்ப்பாணம் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த 18, 24 ,22 வயதுடைய இளைஞர்கள் எனவும், 180 போதை மாத்திரைகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
