சர்வதேச நீதிகோரி – யாழில் கையெழுத்துப் போராட்டம்.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கானதும், நடைபெற்ற இனப்படுகொலைக்குமான “சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று ஆரம்பமானது.
இன்று காலை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய பேரவை உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






