2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தன்சல் பெற காத்திருந்தோருக்கு நேர்ந்த துயரம்; மீகொடையில் 6 உயிர்கள் பலி!

உள்ளூர்June 1, 2026 · 3 months முன்0
தன்சல் பெற காத்திருந்தோருக்கு நேர்ந்த துயரம்; மீகொடையில் 6 உயிர்கள் பலி!

வைகாசி பௌர்ணமி தினத்தில் மீகொடை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்சல் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், மீகொடை பகுதியில் நடைபெற்ற தன்சல் நிகழ்வுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது திடீரென மோதியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

விபத்துக்குப் பின்னர் சாரதி தப்பிச் சென்றிருந்த போதிலும், கொடகம சந்தி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.